ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை
அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
அறிமுகம்
புண்ணிய பாரத பூமியின், சீர்மிகு செந்தமிழ் நாட்டின் தலைநகர், தர்மமிகு சென்னையின் தெற்கு வாயிலான, கூடுவாஞ்சேரி, ஆதனூரில், அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில் அறக்கட்டளையின் பெறும் முயற்சியால் கிருஷ்ணபுரி என்கின்ற இடத்தில் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரர் எனும் பெயரில் சிவாலயம் அமைந்துள்ளது.
சன்னதிகள்
இச்சிவாலயத்தில், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு திருநீலகண்டேசுவரின் பிரதான சன்னதியுடன், ஶ்ரீதேவி-பூதேவி சமேத அருள்மிகு ஶ்ரீநிவாசப் பெருமாள் ஏழு அடிகொண்ட சுவாமி சன்னதி உட்பட 12 சன்னதிகள் அமைந்துள்ளது
மேலும், திருக்கோயிலில் நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் மடப்பள்ளியும் உள்ளன.